தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,469 கனஅடியாக அதிகரிப்பு
2022-11-17@ 17:28:02

தேனி: ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் சின்னசுருளி அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேனி மாவட்டம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது.
இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை தொடர்வதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இதனால் நாளுக்குநாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சின்னசுருளி அருவி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் கடமலைக்குண்டு ஊராட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பு ஆண்டில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் வைகை அணைக்கு நீர்வரத்து 1,469 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1,269 கனஅடியாக இருந்த நிலையில் தற்பொழுது கூடுதலாக 200 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த 1,469 கனஅடி நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
மேலும் செய்திகள்
செங்கல்பட்டில் மக்கள் குறைதீர் கூட்டம்
பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கண்காணிப்பு குழு தலைவர் தகவல்
சுற்றுலா முகவர்கள் வரும் 31ம் தேதிக்குள் நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்
நாகர்கோவிலில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரசார் பேரணி
3வது முறையாக தேர்வெழுத ‘நீட்’ பயிற்சி பெற்ற மாணவன் பள்ளி விடுதியில் தற்கொலை: தோல்வி பயத்தில் தூக்கில் தொங்கினார்
புளியம்பாக்கம் ஊராட்சியில் பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்