பாரிவாக்கம் ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரம்
2022-11-17@ 11:37:25

சென்னை: பூவிருந்தவல்லியை அடுத்த பாரிவாக்கம் ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கனமழை காரணாமாக திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில் பூவிருந்தவல்லியை அடுத்த பாரிவாக்கம் ஏரியும் தன முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் மாருதி நகர், ஜேஜேநகர், பஜனைகோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு வீடுகளுக்குள்ளும் வெள்ளம் தேங்கியதால் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. குடியிருப்புகளை சூழ்ந்த நீரை அகற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது.
ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டு வெள்ள வீர் வெளியேற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த 30க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!