வேலூர் சத்துவாச்சாரி மாருதி நகரில் பாதியில் நிறுத்திய சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
2022-11-16@ 20:06:07

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி மாருதி நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை திட்ட பணியால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 2வது மண்டலம் மாருதி நகரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளது.
தற்போது சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 13வது கிராஸ் சாலையில் ஒரு பகுதியில் மட்டும் பணிகள் நடந்த நிலையில், திடீரென சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இந்த சாலையில்தான் தினந்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மழைநீரும் தேங்கி சேறும் சகதியாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்தது மின்சாரம் பாய்ந்து காட்டுயானை பலி
ரூ.7 லட்சத்தை பறிகொடுத்தார் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவமனை ஊழியர் தற்கொலை: திருச்சி அருகே சோகம்
அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்
தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்
தீர்ப்புகள் மொழி பெயர்ப்பில் சென்னை ஐகோர்ட் முதலிடம்: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி