SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமயநல்லூர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 கோடி செலவில் 591 அதிநவீன கேமரா: ‘பறந்து’ சென்றால் ஃபைன் கட்டணும்; இரவிலும் துல்லியமாக கண்காணிக்கும்

2022-11-16@ 00:32:04

விருதுநகர்: சமயநல்லூர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க, ரூ.80 கோடி செலவில் 591 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலர் வைபவ் மிட்டல் தலைமை வகித்தார்.  கேமரா கட்டுப்பாட்டு அறையை விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகர் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணியும், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் மீட்டர் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்தது. கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதுகுறித்து நான்குவழிச்சாலை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சமயநல்லூர் முதல் கன்னியாகுமரி வரை 248 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர், சாத்தூர், கயத்தாறு, நாங்குநேரி ஆகிய 4 இடங்களில் டோல்கேட்டுகள் உள்ளன. இந்த சாலையில் ரூ.80 கோடி செலவில் பகல், இரவு மற்றும் மழைக்காலங்களிலும் வாகனங்களை துல்லியமாக கண்காணிக்கக் கூடிய 591 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 5 கி.மீ தூரத்திற்கு ஒன்று என்ற அளவில், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் 210 மீட்டர்களும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்டர்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் செல்லும் வாகனங்களையும் கூட அதிநவீன கேமராக்கள் துல்லியமாக அடையாளம் காட்டும். கேமராக்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதி மூலம் விபத்து, கொலை, கொள்ளை குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்வாரை எளிதாக கண்டறியலாம். அதிக வேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதியும் உள்ளது’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்