சமயநல்லூர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 கோடி செலவில் 591 அதிநவீன கேமரா: ‘பறந்து’ சென்றால் ஃபைன் கட்டணும்; இரவிலும் துல்லியமாக கண்காணிக்கும்
2022-11-16@ 00:32:04

விருதுநகர்: சமயநல்லூர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க, ரூ.80 கோடி செலவில் 591 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலர் வைபவ் மிட்டல் தலைமை வகித்தார். கேமரா கட்டுப்பாட்டு அறையை விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகர் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணியும், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் மீட்டர் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்தது. கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதுகுறித்து நான்குவழிச்சாலை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சமயநல்லூர் முதல் கன்னியாகுமரி வரை 248 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர், சாத்தூர், கயத்தாறு, நாங்குநேரி ஆகிய 4 இடங்களில் டோல்கேட்டுகள் உள்ளன. இந்த சாலையில் ரூ.80 கோடி செலவில் பகல், இரவு மற்றும் மழைக்காலங்களிலும் வாகனங்களை துல்லியமாக கண்காணிக்கக் கூடிய 591 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 5 கி.மீ தூரத்திற்கு ஒன்று என்ற அளவில், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் 210 மீட்டர்களும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மீட்டர்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் செல்லும் வாகனங்களையும் கூட அதிநவீன கேமராக்கள் துல்லியமாக அடையாளம் காட்டும். கேமராக்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதி மூலம் விபத்து, கொலை, கொள்ளை குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்வாரை எளிதாக கண்டறியலாம். அதிக வேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதியும் உள்ளது’’ என்றனர்.
Tags:
State Highway 591 State-of-the-Art Camera Samayanallur - Kanyakumari சமயநல்லூர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 591 அதிநவீன கேமராமேலும் செய்திகள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!