SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படகுகளுடன் பிடித்து வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: இரவு முழுவதும் துன்புறுத்தியதாக புகார்

2022-11-16@ 00:31:59

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஒரு வார இடைவெளிக்குப் பின் கடலுக்கு சென்றதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து தாக்கி விரட்டியடித்தனர். பின்னர் 3 விசைப்படகுகளை பிடித்த கடற்படையினர், இரவு முழுவதும் நிறுத்தி வைத்து மீனவர்களை அடித்து துன்புறுத்தினர். பல மணி நேரத்திற்கு பின் அவர்களை விடுவித்தனர். இவர்கள் நேற்று காலை கரை சேர்ந்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல், விரட்டியடிப்பு சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர் படகுகளில் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்தது. ஒரு வாரத்திற்கு பின் கடலுக்கு சென்ற நிலையில், இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலால், மீன்வரத்து குறைந்ததால் மீனவர்கள் கவலையடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்