ஆஜராகும் தேதி மாற்ற வேண்டும் முதல்வர் சோரன் கோரிக்கை அமலாக்கத் துறை நிராகரிப்பு
2022-11-16@ 00:31:06

ராஞ்சி: சட்ட விரோத சுரங்க வழக்கில் ஒருநாள் முன்னதாக விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்கும்படி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விடுத்த வேண்டுகோளை அமலாக்கத்துறை நிராகரித்தது. ஜார்கண்ட் முதல்வர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ராஞ்சியில் சட்ட விரோதமாக சுரங்கங்களை குத்தகைக்கு விட்டதில் ரூ.1,000 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக சோரன் மீது பாஜ தலைவரும் முன்னாள் முதல்வருமான ரகுபர் தாஸ் குற்றம் சாட்டினார். இந்த வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத் துறை, ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கடந்த 3ம் தேதி ஹேமந்துக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை ஆஜராக கூறி கடந்த 11ம் தேதி அமலாக்கத் துறை அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால், ஒருநாள் முன்னதாக, அதாவது இன்று ஆஜராகி விளக்கம் அளிப்பதாக அமலாக்கத்துறைக்கு அவர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.
Tags:
Date of appearance Principal Soran Request Enforcement Department rejection ஆஜராகும் தேதி முதல்வர் சோரன் கோரிக்கை அமலாக்கத் துறை நிராகரிப்புமேலும் செய்திகள்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!