குமரியில் 23 இடங்கள் காலி ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்: நாளை கடைசி
2022-11-15@ 20:12:43

நாகர்கோவில்: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நாளை (16ம்தேதி) மாலை 5 மணிக்குள், எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பதாரர் 31.10.22 அன்று 18 வயது முடிவு பெற்றவராக இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் இருக்க கூடாது. நல்ல உடல் ஆரோக்கியம் உடையவராகவும், நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் உடையவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
பொது நலத்தொண்டில் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும். குறைந்தது மூன்று வருடம் பணிபுரிய விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசு ஊழியராகவோ, சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவோ இருத்தல் வேண்டும். ஒரு அழைப்புக்கான ஊதியம் ரூ.560 ஆகும். ஒரு நபருக்கு, ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி