குழந்தைகள் தினத்தன்று நடந்து சென்ற மாணவர்களை காரில் அழைத்து சென்ற அமைச்சர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
2022-11-15@ 15:31:52

காரைக்கால்: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா காரைக்கால் அடுத்த நெடுங்காட்டில் உள்ள தனது வீட்டிலிருந்து நேற்று காலை அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சில பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்வதை கண்ட அவர், பள்ளி மாணவர்களை தனது காரில் ஏற்றி கொண்டு சென்றார். அப்போது சிறுவர்கள் காரில் பாட்டு இல்லையா என்று கேட்டு விட்டு, அவர்களே பாட்டு பாடி வந்தனர்.
இதனை கண்ட சந்திர பிரியங்கா அவரது செல்போனில் செல்பி வீடியோ எடுத்துள்ளார். இது கண்ட சிறுவர்கள் பாட்டு பாடுவதை நிறுத்தி உள்ளனர். உடனே சந்திர பிரியங்கா ``டேய் வெட்கப்படாதீங்கடா... பாடுங்கடா’’ என்று சொல்லியவாறு அந்த சிறுவர்களை பள்ளியில் இறக்கி விட்டு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். வழியில் மாணவர்களுடன் அமைச்சர் பேசி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!