வேலைக்கு சேர்ந்த முதல்நாளே மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் பலி
2022-11-15@ 00:02:09

சென்னை: சென்னை தி.நகர் நாயர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாபு (27) என்பவர் சர்வராக நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில், ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஷட்டரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அதை கவனிக்காத பாபு அதில் கை வைத்துள்ளார். உடனே உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வாலிபர் பாபு, அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழ கொளத்தூரைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த முதல்நாளிலேயே உயிரிழந்தது குடும்பத்தினர் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!