SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ரூ.28.10 லட்சம் நிதி ஒதுக்கீடு

2022-11-14@ 18:40:56

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் பழமையான அருள்மிகு  பெரிய நாயகி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலிலை  இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு, பணிகள் தொடங்க இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நேற்று இரவு இத்திருக்கோயில் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இன்று இத்திருக்கோவிலுக்கு நேரில் சென்று மண்டபத்தின் இடிந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை புனரமைக்க  ரூ.28.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் திருப்பணிகளை தொடங்குவதற்கான பாலாலயம் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்