நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது: வைகை அணைக்கு நீர்வரத்து 3,592 கனஅடியாக சரிவு
2022-11-14@ 18:34:25

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் வைகை அணைக்கு இன்று நீர்வரத்து 3592 கன அடியாக உள்ளது. இந்தநீர் உபரிநீராக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. வைகை அணைக்கு இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே மழை காரணமாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் மேல் காணப்பட்டது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வைகை அணை இந்தாண்டு 2வது முறையாக நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 10538 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், வைகை அணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 3592 கன அடியாக உள்ளது. அந்த தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 70.1 அடியாக உள்ளது.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!