இந்தோனேஷியா சிறையில் கன்னியாகுமரி மீனவர் உயிரிழப்பு: சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை
2022-11-14@ 14:36:30

கன்னியாகுமரி: இந்தோனேஷியா சிறையில் கன்னியாகுமரி மீனவர் உயிரிழந்த வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி தூத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெசின்ராஜ் உள்பட 4 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி இந்தோனேஷியா கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் ஜெசின்ராஜ் என்பவர் கடந்த மே 22-ம் தேதி சிறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் விமான மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் உடற்கூராய்வு சோதனை அறிக்கையில் ஜெசின்ராஜ் உடலில் பல காயங்கள் இருந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள மீனவர்கள் சிறையில் உள்ள எஞ்சிய 3 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி