கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் 3 கிமீ தூரம் சடலத்தை தோளில் சுமந்த கிராம மக்கள்
2022-11-14@ 14:11:47

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் பாலம் வசதியின்றி காட்டாற்று வெள்ளத்தில் சடலத்தை தோளில் சுமந்து 3 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் கடந்து செல்லும் அவலம் அரங்கேறியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அரிகியம் மலை கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்துமாரி (55). உடல்நிலை சரியின்றி கோவை அரசு மருத்துமனையில் கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து சித்துமாரியின் உறவினர்கள் இலவச அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றனர். அப்போது கடம்பூர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன்ம் அதற்கு மேலும் செல்லமுடியாத நிலையில் டிரைவர் சடலத்தை குரும்பூர் பள்ளத்தின் அருகிலேயே இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து, அங்குவந்த அரிகியம் மலைக்கிராம மக்கள் சித்துமாரியின் உடலை தோளில் சுமந்தபடி காட்டாற்றை கடந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக 3 கிமீ தூரம் சுமந்து சென்று அரிகியம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். உயர் மட்ட பாலம் இல்லாததால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் உயிரை பணயம் வைத்து சடலத்தை கிராம மக்கள் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
குரும்பூர் பள்ளம், சக்கரைப்பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளின் குறுக்கே ₹7 கோடி செலவில் உயர் மட்ட பாலம் கட்ட டெண்டர் விடப்பட்ட நிலையில் விரைவில் பாலம் கட்டுமான பணியை தொடங்க அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்தது மின்சாரம் பாய்ந்து காட்டுயானை பலி
ரூ.7 லட்சத்தை பறிகொடுத்தார் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவமனை ஊழியர் தற்கொலை: திருச்சி அருகே சோகம்
அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்
தூத்துக்குடி ஆவின் உதவி பொதுமேலாளர் திடீர் சஸ்பெண்ட்
தீர்ப்புகள் மொழி பெயர்ப்பில் சென்னை ஐகோர்ட் முதலிடம்: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி