தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடரும் விபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
2022-11-14@ 12:56:13

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் சென்னையில் இருந்து விக்கிரவாண்டி வழியே கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றது. அவ்வாறு கடந்து செல்லும் வாகனங்கள் திடீரென பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே மேய்ச்சலுக்காக கால்நடைகள் வரும்போது எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படுகிறது.
இதனால் சில நேரங்களில் மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கப்பியாம்புலியூர் அருகே கால்நடைகள் சுற்றித்திரிகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினந்தோறும் பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கால்நடைகளால் உயிரிழப்புகள் அதிகம் நேரிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர். எனவே சுற்றித்திரியும் கால்நடைகளை மாவட்ட நிர்வாகம் பிடித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!