திருச்சுழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம்
2022-11-13@ 14:17:54

திருச்சுழி: திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள், பொதுமக்கள் வளர்த்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திருச்சுழியில் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். குறிப்பாக திருச்சுழி, தமிழ்பாடி, சித்தலக்குண்டு, கேத்தநாயக்கன்பட்டி, சித்தலக்குண்டு, கண்டமங்கலம், உடையனாம்பட்டி, சென்னிலைகுடி, பள்ளிமடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சுழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மழை யால் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அங்கு கால்நடைகளை கொண்டு சென்று நிறுத்தி வைக்க போதுமான வசதிகள் இல்லாததால் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், மழைக் காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. எனவே, சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அதிகாரிகள் உடனடியாக கவனித்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு நிழற்கூடங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!