காற்றழுத்த தாழ்வு நிலை பாதிக்காததால் நெல்லை, தென்காசியில் கன மழை இல்லை
2022-11-12@ 17:41:52

நெல்லை: காற்றழுத்த தாழ்வு நிலை தென்மாவட்டங்களை பாதிக்காததால் கனமழை இல்லை. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நேற்று மழை பதிவு மிகவும் குறைந்தது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று உருவானது. இதன் காரணமாக பல வட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. அதே நேரத்தில் நெல்லை, ெதன்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யவில்லை. சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை ராதாபுரம், சேர்வலாறு அணை பகுதியில் தலா 3 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற இடங்களில் மழை இல்லை. வானம் மேகமூட்டமாக இருந்தும் மழை இல்லை. பாபநாசம் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 826 கனஅடியாக குறைந்துள்ளது. அணை நீர் மட்டம் 88.75 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஆயிரத்து 200 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர் மட்டம் 92.52 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் மட்டம் 75 அடி. வடக்கு பச்சையாறு நீர் மட்டம் 13.25 அடி. நீர் வரத்து இல்லை.
நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடி. கொடுமுடியாறு 49 அடி நீர் மட்டம் உள்ளது. நெல்லையை விட தென்காசி மாவட்டத்தில் நேற்று ஓரளவு பரவலாக மழை பெய்துள்ளது. இங்கு அதிகபட்சமாக கருப்பா நதி அணை பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடி 12, செங்கோட்டை 1, சிவகிரி 4, தென்காசி 6, கடனா 3, ராமநதி 4, குண்டாறு 2.20, அடவிநயினார் 4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மேலும் செய்திகள்
ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!