ஆஞ்சநேயர் கோயிலில் மழைநீர் புகுந்ததால் தண்ணீரில் நின்றபடி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி
2022-11-12@ 01:36:34

பெரம்பூர்: புளியந்தோப்பில் ஆஞ்சநேயர் கோயிலில் மழைநீர் புகுந்ததால் தண்ணீரில் நின்றபடி, காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு இடங்களிலும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மழையிலும் நடைபெற்றது.
கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகேஷ், மூலக்கடை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய 2 பேரும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். காதல் ஜோடிகளான இவர்கள் திருமணம், பெற்றோர் சம்மந்தத்துடன் நேற்று புளியந்தோப்பு பட்டாளம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது.தொடர்மழை காரணமாக பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டிருந்தது.
இதனால், மழைநீர் கோயிலுக்குள் நின்றாலும், தங்களது திருமணம் நிற்காமல் நடக்க வேண்டும் என்ற நோக்கில் மழைநீரில் நின்றபடியே இவர்களின் திருமணம் நடைபெற்றது. சுற்றமும் சூழ வருகை தந்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை வாழ்த்த வேண்டுமென்ற வகையில் கோயிலில் இருந்த மழைநீர் சூழ இந்த திருமணம் இனிதே நடைபெற்றது.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!