தொடர்ந்து சினிமாவில் நடிப்பேனா?: உதயநிதி ஸ்டாலின் பதில்
2022-11-12@ 01:05:11

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள படம், ‘கலகத் தலைவன்’. மற்றும் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன், அங்கனா ராய் நடித்துள்ளனர். கே.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு 120 நாட்களுக்கு மேல் நடந்துள்ளது. இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. அடுத்து ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடிக்கிறேன். ‘சைக்கோ’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கலகத் தலைவன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களின் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால், நான் ‘மாமன்னன்’ படத்தை முடித்துவிட்டு, என் போன் நம்பரை மாற்றிவிட்டு எஸ்கேப் ஆகப்போகிறேன். நிறைய வேலைகள் இருக்கிறது. தமிழ் சினிமாவையே நான்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல், நான் நடிப்பதை நிறுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
இன்னும் நான் நடிக்கவே தொடங்கவில்லை. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாகப் பேசினார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி, லலித் குமார், இயக்குனர்கள் மிஷ்கின், சுந்தர்.சி, ராஜேஷ்.எம், அருண்ராஜா காமராஜ், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன், நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால், பாபி சிம்ஹா, பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, பிரியன் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!