பலியானவர்களுக்கு நிவாரண நிதி சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து தேசிய தீர்ப்பாயத்துக்கு நோட்டீஸ்
2022-11-12@ 00:39:42

புதுடெல்லி: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பட்டாசு விபத்தில் பலியான ஒவ்வோரு குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த வழக்கை விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கே வழக்கை மாற்றி உத்தரவிட்டது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘விபத்தில் உயிரிழந்த 27 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சமும், 50 சதவீத தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சமும், 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று கடந்த மார்ச் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது நேற்று, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘விபத்தில் பலியானவர்களுக்கு உரிய நிதி உதவியை மாநில அரசு வழங்குகிறது. இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட முடியாது. மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது,’ என வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், ‘தமிழக அரசின் வாதத்தை நீதிமன்றம் புரிந்து கொள்கிறது. இருப்பினும், விதிமுறைகளை தளர்த்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி உதவி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.
Tags:
Victim Relief Fund Chatur Crackers Factory Accident National Tribunal Notice பலியானவர் நிவாரண நிதி சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து தேசிய தீர்ப்பாய நோட்டீஸ்மேலும் செய்திகள்
மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்
பூட்டான் மன்னர் நாளை வருகை
பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்
2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி
சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!