குஜராத், இமாச்சலில் ரூ.122 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
2022-11-11@ 15:36:26

புதுடெல்லி: குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.122 கோடி மதிப்பிலான பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்தில் நாளை சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத்தில் வரும் டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பால், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கணக்கில் வராத பணம், மது, போதைப் பொருட்கள், விலைமதிப்பற்ற ஆபரணங்கள், இலவச பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து வருகிறது.
அந்த வகையில் இமாச்சல் பிரதேசத்தில் மட்டும் விதிமுறை மீறி கொண்டு செல்லப்பட்ட 50.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், மது, போதைப் பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் குஜராத்தின் ரூ.71.88 கோடி மதிப்புள்ள பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு மாநிலங்களிலும் மொத்தம் ரூ.122.16 கோடி மதிப்புள்ள பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!