நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
2022-11-11@ 11:57:44

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதி துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், இடைக்கால தடை விதிக்க கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ்கன்னா, ஜெ.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் விமரிசிக்க அனைவருக்கு உரிமை உண்டு, ஆனால் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான வழிமுறைகள் என்பது உண்டு. அந்த வழிமுறைகளில் மட்டுமே எதையும் விமர்சனம் செய்யவேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் மனுதாரர் எவ்வளவு நாட்கள் சிறையில் உள்ளார், அவரது பின்னணி குறித்து நீதிபதிகள் விசாரித்தனர். இதனை தொடர்ந்து தற்போது சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுமீது பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளருக்கும் ட்விட்டர், பேஸ்புக், யூடியுப் உள்ளட்ட மின்னணு தகவல் தொழில்நுட்ப செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறையில் இருந்து வெளிய வந்து அடுத்த விசாரணை வரை அவர் எந்த கருத்துக்களையும் சமூக ஊடகங்களிலோ, பேட்டியிலோ தெரிவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!