வடசென்னை பேருந்து நிறுத்தங்களில் ரூ.22 லட்சத்தில் நிழற்குடை பணி: எம்பி தொடங்கி வைத்தார்
2022-11-11@ 00:53:19

தண்டையார்பேட்டை: வடசென்னை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணியை வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தார். வடசென்னை பகுதியில் உள்ள ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், நெடுஞ்சாலை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் மற்றும் மகாராணி திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்பேரில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு நிழற்குடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, எம்எல்ஏ எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ், இலக்கிய அணி செயலாளர் பாண்டி செல்வம் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!