அதிமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்சிக்காக சாலையை ஆக்கிரமித்து வைத்த பேனரால் முதியவர் பரிதாப பலி
2022-11-11@ 00:44:41

சென்னை: பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது. மீறால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, அம்பத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் மகாலிங்கம், தனது இல்ல திருமணத்தை முன்னிட்டு நேற்று மாலை திருமுல்லைவாயில் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து திருமுல்லைவாயில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையின் இரண்டு புறமும் ராட்சத பேனர்கள் வைத்திருந்தார்.
மேலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சாலையின் முக்கிய சந்திப்புகளின் இருபுறமும், சாலைகளின் நடுவிலும் பேனர்கள் வைத்தனர். இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் பாதசாரிகள் என பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில், திருமுல்லைவாயல் ஸ்ரீதேவி நகரை சேர்ந்த ராமையா (80) நேற்று மாலை 6 மணியளவில், திருமுல்லைவாயல் பிரதான சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது, ஆவடியில் இருந்து அம்பத்தூர் நோக்கி பைக்கில் சென்ற நபர், சாலையோரத்தில் வைத்திருந்த அதிமுக பேனர்களை பார்த்தப்படி தனது வாகனத்தை வேகமாக ஓட்டியதால் திடீரென முதியவர் மீது மோதியுள்ளார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தவர் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆவடி போக்குவரத்து போலீசார், முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பூந்தமல்லி புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், விபத்தை ஏற்படுத்தியவர், செங்குன்றம் பூச்சி அத்திப்பேடை சேர்ந்த புருஷோத்தமன், (32) வெல்டிங் தொழிலாளி என தெரிய வந்தது. இந்த விபத்தில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Tags:
AIADMK leader house wedding ceremony road banner old man victim அதிமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி சாலை பேனரால் முதியவர் பலிமேலும் செய்திகள்
அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்..!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவு: நாளை மறுநாள் தீர்ப்பு..!
சென்னையில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய, சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்..!
அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 4 கிலோ கஞ்சா பறிமுதல்..!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!