SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வந்தே பாரத் ரயில் அட்டவணைப்படி இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

2022-11-11@ 00:03:04

சென்னை: சென்னை சென்ட்ரல் - மைசூரு -  சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் வழக்கமான இயக்கம் நாளை முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் - மைசூரு -  சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை சென்ட்ரல் மற்றும் மைசூரு ஆகிய இரு இடங்களிலிருந்தும் நவம்பர் 12ம் தேதி முதல் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான எண்.20607/20608.ெசன்னை சென்ட்ரல் - மைசூரு -  சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரத்தில் 6 நாட்கள் (புதன்கிழமை தவிர) 2முனைகளிலிருந்தும் இயக்கப்படும்.

இரண்டு சேவைகளுக்கும் காட்பாடி  மற்றும் கேஎஸ்ஆர் பெங்களூருவில்  மட்டுமே நிறுத்தப்படும். அதன்படி, சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே காலை 5.50 மணிக்கு புறப்படும். காட்பாடியில் காலை 7.21 முதல் 7.25 வரை நிற்கும் மற்றும் காலை 10.20 முதல் 10.25 வரை பெங்களுருசென்றடையும். பின்னர் மதியம் 12.25 மணிக்கு மைசூரு சென்றடையும். மைசூரு- சென்னை இடையே மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு பெங்களுருவுக்கு மதியம் 2.55 முதல் 3 மணிக்கு சென்றடையும். காட்பாடிக்கு மாலை 5.36 முதல் 5.40 மணிக்கு சென்றடையும். இறுதியாக, சென்னைக்கு இரவு 7.30 மணிக்கு வந்தடையும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்