SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போடியில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

2022-11-10@ 19:52:15

போடி: தேனி மாவட்டம், போடியில் கடந்த 1901ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டு காமராஜர் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு பதிவாளர் உட்பட 7 பேர் பணியில் உள்ளனர். போடியைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் நிலம், வீடு வாங்க, விற்க இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர். இந்தக் கட்டிடம் 121 ஆண்டுகள் கடந்தும், இன்னும் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் கட்டிட மேற்கூறையில் விழுந்துள்ள விரிசல் காரணமாக மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் அலுவலகத்தில் உள்ள முக்கியமான ஆவணங்கள் தண்ணீரில் நனையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் வளாகத்திற்குள் கழிப்பிட வசதி சரிவர இல்லாததால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்த அலுவலகத்தின் கட்டிட சுவர்கள் அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டு உறுதியாக இருந்தாலும், மேற்கூரை முழுவதும் பழுதாகி இருப்பதால், அங்கு வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் ஒருவித அச்சுத்துடனே இருந்து வருகின்றனர். எனவே பழைய அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் நவீன முறையில் கட்ட வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்