ஆவின் நிறுவனம் மீது தவறான தகவல்கள் பரப்புகின்றனர் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் பாஜ போராட்டத்துக்கு கண்டனம்
2022-11-10@ 00:17:59

சென்னை: ஆவின் நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் பரப்பிவிட்டு போராட்டம் அறிவித்துள்ளது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பால் கொள்முதல் விலையை உயர்த்தியமைக்காக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர், பொருளாளர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நன்றியினை தெரிவித்தனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் அளித்தனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜேந்திரன் கூறியதாவது: ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 உயர்த்திக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி. ஆவின் நிறுவனம் பற்றி தவறான தகவல்கள் பரப்பி பாஜக போராட்டம் அறிவித்துள்ளதாகவும் பாஜ ஆளும் மாநிலங்களில் பால் விலை எந்த அளவு என்பதை தமிழக பாஜ தலைமை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அரசியல் செய்ய வேண்டாம். பால் முகவர் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்திற்கு ஏஜெண்டும் இல்லை, உற்பத்தியாளரும் இல்லை. அதே போல் ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தியதை மேலும் கூடுதலாக உயர்த்தித்தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!