SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி செயல்படும் மதுபார்

2022-11-09@ 18:11:52

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வேற்காடு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தை ஒட்டி, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையோரமாக டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. எனினும், இந்த டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக 24 மணி நேரமும் சகல வசதிகளுடன் ஒரு மதுபான பார் இயங்கி வருகிறது.

இதனால் அந்த பாருக்கு வருபவர்கள் சர்வீஸ் சாலையோரமாக வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு, மது அருந்திய நிலையில் வாகனங்களை ஓட்டி சென்று வருகின்றனர். இதில் பல்வேறு வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்த சட்டவிரோத மதுபான பார் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அரசின் மதுபான கடை சூபர்வைசர் தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இங்கு உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்