கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் ஆகாச தீபம் ஏற்றம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு
2022-11-08@ 14:48:32

ஸ்ரீகாளஹஸ்தி : கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, ஸ்ரீகாளஹஸ்தியில் கோயிலில் ஆகாச தீபம் ஏற்பட்டது. திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி, நேற்று அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெண் பக்தர்கள் கோயில் வளாகத்தில் கார்த்திகை தீபங்களை ஏற்ற ஒதுக்கப்பட்ட 4 பகுதிகளிலும் ஏராளமானோர் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். மேலும், ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை ஏற்றப்பட்டு கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கலந்து கொண்டு வழிபட்டனர். வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது. இலவசமாக பிரசாதங்களை வழங்கப்பட்டது. இதேபோல், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மற்றும் கோயிலில் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஊஞ்சல் சேவை மற்றும் உச்சமூர்த்திகளை மாடவீதியில் உலா வந்தனர்.
வரசித்தி விநாயகர் கோயிலின் துணை கோயிலான ஸ்ரீமணிகண்டேஸ்வர சுவாமி கோயிலிலும் கார்த்திகை பவுர்ணமியையொட்டி (நெல்லிக்காய்) மரத்தின் அடியில் பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலையில் (ஜுவாலா தோரணம் )மற்றும் தீப அலங்காரம் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ சுவாமி கோயிலிலும் கார்த்திகை பவுர்ணமியையொட்டி சத்யநாராயண சுவாமி விரத பூஜை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!