மேட்டுப்பாளையம் அருகே மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து முடக்கம்; பவானி ஆற்றில் படகு பயணம்-சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
2022-11-08@ 14:01:45

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து முடங்கியதை தொடர்ந்து பொதுமக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் பவானி ஆற்றில் இயந்திர படகு இயக்க சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்ய துவங்கியுள்ளது.
இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 103 அடியை எட்டியுள்ளது. இதனால் பவானி சாகர் அணையின் நீர் தேக்க பகுதியில் அமைந்துள்ள லிங்காபுரம் காந்தவயல் கிராமங்களுக்கு இடையிலான 20 அடி உயர் மட்ட பாலம் ஏற்கனவே தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது இணைப்பு சாலையும் வெள்ளநீரில் முழுமையாக மூழ்கியது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்காக வெளியூர் செல்வோர் என பொதுமக்கள் மிகவும் சிரமடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து அரை கிமீ நடந்து சென்று பின்னர் அங்கிருந்து பரிசல் மூலம் தங்களது கிராமங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் தண்ணீரில் வாகனங்களை இயக்கி பாதியிலேயே பழுதாகி நின்று அவதியடைந்து வருகின்றனர்.
இதையடுத்து மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே ஆழியாறு பேரூராட்சி பகுதியில் இருந்து லாரி மூலம் இயந்திர படகு லிங்காபுரம் கொண்டு வரப்பட்டு கிரேன் உதவியுடன் பவானி ஆற்றங்கரையில் வைக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, நாளை முதல் லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானி ஆற்றில் பொதுமக்கள் வசதிக்காக படகு இயக்கப்படும் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை மறித்து நிறுத்தி மக்காச்சோளம் ருசித்த காட்டு யானையால் பரபரப்பு
மழையால் பழைய பாலம் சேதம்: மங்குழி புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது
சுவரோவிய கலையில் கல்லூரி மாணவி வரைந்த படம் ஓவிய கண்காட்சியில் தேர்வு
இனி 6 மணி நேரத்தில் சென்னை டூ கோவை : வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடக்கம்; 8ம் தேதி பிரதமர் சேவையை தொடக்கி வைக்கிறார்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!