SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மனிதகுலம் அழிந்து போகும்: ஐ.நா. பொது செயலாளர் எச்சரிக்கை

2022-11-08@ 11:39:17

கெய்ரோ: புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மனிதகுலம் அழிந்து போகும் என ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். பருவநிலை மற்றம் தொடர்பான 27-ம் ஆண்டு ஐ.நா.உச்சி மாநாடு எகிப்த்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்று உரையாற்றிய ஐ.நா.பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் கால நிலை ஒற்றுமை ஒப்பந்தத்தை உருவாக்கவேண்டும். இல்லை எனில் தானாகவே கூட்டு தற்கொலை ஒப்பந்தம் உருவாகிவிடும் என எச்சரித்தார்.

புவி வெப்பமயமாகும் வேகத்தை பார்த்தல் நகரத்தை நோக்கி அதிவிரைவு சாலையில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது என கூறிய அன்டோனியோ குட்டரெஸ் நாம் ஒன்றுபட்டால் உயிர்பிழைக்கலாம் அல்லது அழிந்து போகலாமே என தெரிவித்தார். புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளை வளரும் நாடுகளை அதிகம் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்