ஆம் ஆத்மி மீதான புகார் பற்றி சிபிஐ விசாரணை கோரி சுகேஷ் ஆளுநருக்கு கடிதம்: சிறையில் தனக்கு அசம்பாவிதம் நடக்கலாம் என குற்றச்சாட்டு
2022-11-08@ 00:57:50

புதுடெல்லி: ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியில் முக்கிய பதவி மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவதாக ஆம் ஆத்மி உறுதி அளித்ததாகவும் இதற்காக கட்சிக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநருக்கு சுகேஷ் கடிதம் எழுதி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுகேஷ் டெல்லி ஆளுநர் வினய் சந்திரசேகருக்கு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கின்றார். இதில், ‘‘சிறையில் எனக்கு நெருக்கடி அதிகரிக்கின்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த உண்மை வெளிவருவதற்கு முன் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம். கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். சத்யேந்தர் ஜெயின் மற்றும் டெல்லி சிறைகளின் இயக்குனர் ஜெனரல் சந்தீப் கோயல் ஆகியோர் தரப்பில் இருந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றது. எனது அறிக்கைக்கு பின் சிறையில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென டெல்லி மாநில பாஜ கட்சியும் வலியுறுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!