டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் பைனலில் கார்சியாவுடன் சபலென்கா மோதல்: ஸ்வியாடெக், சாக்கரி ஏமாற்றம்
2022-11-08@ 00:42:20

ஃபோர்ட் வொர்த்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்கா (பெலாரஸ்) - கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதுகின்றனர். ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மோதும் இந்த தொடரின் லீக் சுற்றில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), மரியா சாக்கரி (5வது ரேங்க், கிரீஸ்) இருவரும் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தனர்.
இந்த நிலையில், பரபரப்பான முதல் அரையிறுதியில் சபலென்காவுடன் (7வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் 2-6, 6-2, 1-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார். 2 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்த இப்போட்டியில் அபாரமாக வென்ற சபலென்கா பைனலுக்கு முன்னேறினார். நடப்பு சீசனில் ஸ்வியாடெக்குடன் 5வது முறையாக மோதிய அவர் முதல் முறையாக வெற்றியை ருசித்தார். மற்றொரு அரையிறுதியில் மரியா சாக்கரியின் (கிரீஸ், 5வது ரேங்க்) சவாலை எதிர்கொண்ட கரோலின் கார்சியா (6வது ரேங்க்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார்.
இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் பைனலில் சபலென்கா - கார்சியா மோதுகின்றனர். இருவரும் முதல்முறையாக டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2019ல் சபலென்கா லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், 2016ல் கார்சியா அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார்.
மேலும் செய்திகள்
கைல் மேயர்ஸ் 73 ரன் விளாசல் லக்னோ ரன் குவிப்பு
மழையால் ஆட்டம் பாதிப்பு 7 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்
இன்னும் 20 ரன் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்: தோல்வி குறித்து கேப்டன் தோனி பேட்டி
மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் ரைபாகினாவுடன் குவித்தோவா பலப்பரீட்சை
ருதுராஜ் அதிரடி ஆட்டம்: சிஎஸ்கே 178 ரன் குவிப்பு
வண்ணமயமான தொடக்க விழா
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!