பாஜ மீது பிரியங்கா தாக்கு எரிபொருள் நிரப்ப மறந்த இரட்டை இன்ஜின் அரசு
2022-11-08@ 00:24:44

உனா: ‘இமாச்சல பிரதேசத்தில் பாஜவின் இரட்டை எஞ்சின் அரசானது எரிபொருள் நிரப்புவதற்கு மறந்துவிட்டது’ என்று பாஜ தலைமையிலான மாநில அரசை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் வருகின்ற 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.
உனாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகின்றது. நினைவில் கொள்ளுங்கள். இந்த தேர்தல்கள் தான் உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இங்கு மக்களுக்கு ஏன் பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்கப்பெறவில்லை. யோசித்து பாருங்கள். பாஜ தலைவர்கள் வந்து எங்களுக்கு வாக்களியுங்கள் இரட்டை எஞ்ஜின் ஆட்சி கிடைக்கும் என்பார்கள். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டாக இருந்தார்கள். அவர்கள் இன்ஜினுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு மறந்து விட்டனர்’’ என்றார்.
* காங்கிரஸ் ‘வைடு பால்’
இமாச்சலின் பைஜ்நாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘தற்போதுள்ள அரசியலை சுருக்கமாக சொல்வதென்றால் அரசியல் பிட்சில் பாஜ ஒரு அருமையான பந்து (குட் லெந்த் பால்). காங்கிரஸ் ‘வைடு பால்’. ஆம் ஆத்மி ‘நோ பால்’. காங்கிரஸ் ஆட்சியின்போது 9வது இடத்தில் இருந்த பொருளாதாரம் பிரதமர் மோடியின் தலைமையில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!