ஏரிக்குள் பாய்ந்த கார்: பாஜ நிர்வாகி தப்பினார்
2022-11-07@ 16:44:12

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (48). பாஜ மாவட்ட துணை தலைவர். இவர் நேற்று திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டைக்கு முத்துப்பேட்டை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் தனது காரில் புறப்பட்டார். காரை, கணேசன் என்பவர் ஓட்டினார். மங்கள் ஏரி அருகே வளைவில் திரும்பும்போது கார், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி ஏரிக்குள் பாய்ந்தது.
இதில் காரின் முன்பக்க கதவு திறக்க முடியாதபடி மூழ்கியதால் பின் பகுதி கதவை உடைத்து கொண்டு இருவரும் மேலே வந்தனர். இதில் காயமடைந்த இருவரும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த முத்துப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரை மீட்டனர்.
மேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!