தண்ணீர் மாசுபடாமல் காப்பதற்கு கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: தலைமை செயலாளர் உத்தரவு
2022-11-07@ 01:23:57

அம்பத்தூர்: கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 590 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரி நிரம்பி வருகிறது. இந்த ஏரியில் 3 இடங்களில் தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருவதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்பேரில், கொரட்டூர் ஏரியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் கொரட்டூர் ஏரியில் தொழிற்சாலை கழிவு நீர் கலக்கும் ஜீரோ பாயின்ட் பகுதி மற்றும் கழிவு நீர் சேரும் 3 இடங்களை பார்வையிட்டனர்.
ஏரியில் தண்ணீர் மாசுபடுவதை தடுக்க, கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். ஆய்வின்போது அம்பத்தூர் எம்.எல்.ஏ.ஜோசப்சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தலைமை பொறியாளர் முரளிதரன், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி, பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், அம்பத்தூர் மண்டல ஆணையாளர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர் சதீஷ்குமார், கவுன்சிலர் ஜான் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!