நம்பர் பிளேட் இல்லாத கார் மோதி விபத்து; ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி கொலை?: கர்நாடகாவில் பரபரப்பு
2022-11-06@ 16:09:47

மங்களூரு: மங்களூருவில் நம்பர் பிளேட் இல்லாத கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற உளவுத் துறை அதிகாரி மரணம் அடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவில் உதவி இயக்குநராக ஆர்.எஸ்.குல்கர்னி (83) என்பவர் பணியாற்றினார்.
ஓய்வுபெற்ற அவர், மங்களூரு அடுத்த மானசா கங்கோத்ரி அருகே வழக்கம் போல் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் கீழே விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் ஆர்.எஸ்.குல்கர்னியை மீட்டு மருத்துவமனைக்கு சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த ஜெயலட்சுமி நகர போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று நடைப்பயிற்சி மேற்கொண்ட ஆர்.எஸ்.குல்கர்னி மீது மோதியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். திட்டமிடப்பட்ட கொலையா? அல்லது எதிர்பாராத விபத்தா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
மேலும் செய்திகள்
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு: சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒருவர் கைது
தகாத உறவை அம்பலப்படுத்திய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-பெரம்பலூர் அருகே பயங்கரம்
நள்ளிரவில் கண்முன்னே காதலனுடன் தனிமை கணவனை சரமாரி வெட்டி விட்டு போலீசில் சரணடைந்த மனைவி
குடிபோதையில் தகராறு 7 ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த 3 வாலிபர்கள் கைது
சவாரி அழைப்பது போல் நடித்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை
கத்தி முனையில் மிரட்டி வாலிபரிடம் நகை பறிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!