டெல்லியில் புதிய கலால் கொள்கை முறைகேடு துணை முதல்வரின் உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி
2022-11-06@ 00:15:51

புதுடெல்லி: புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் சிசோடியாவின் உதவியாளரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. டெல்லியில் நடைமுறைபடுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வர் சிசோடிய உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக துணை முதல்வர் சிசோடியா வீடு, வங்கி லாக்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையும் நடத்தியது. சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. சோதனைக்கு பிறகு தேவேந்திர சர்மாவிடம் அமலாக்கத்துறை அதிகரிகள் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
* பயத்தால் போலி வழக்கு
சிசோடியா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், , ‘அமலாக்கத்துறை ஒரு போலி வழக்கை பதிவு செய்து எனது வீடு, வங்கி லாக்கர்ஆகியவற்றில் சோதனை செய்தது. அவர்கள் எதையும் கைப்பற்றவில்லை என்பதால் தற்போது எனது உதவியாரை கைது செய்துள்ளது. இதன் பின்னணியில் பின்னால் பாஜவினர் உள்ளனர். ஆம் ஆத்மி மீதான தேர்தல் பயத்தால், இதுபோன்ற போலி வழக்குகளை பதிவு செய்து மிரட்டுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.
Tags:
Delhi New Excise Policy Irregularity Assistant to Deputy Chief Minister Arrest Enforcement Dept டெல்லி புதிய கலால் கொள்கை முறைகேடு துணை முதல்வரின் உதவியாளர் கைது அமலாக்கத்துறைமேலும் செய்திகள்
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்
அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!