அழகர்கோயிலில் தைல காப்பு திருவிழா: நூபுர கங்கையில் இன்று சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்
2022-11-05@ 21:06:24

அழகர்கோவில்: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள தென் திருப்பதி என்றழைக்கப்படும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைலக்காப்பு திருவிழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழா இன்று காலை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நூபுரகங்கையில் பெருமாள் நீராடினார். இதையொட்டி சுந்தரராஜ பெருமாள் தனது இருப்பிடத்தில் இருந்து இன்று காலை நூபுர கங்கைக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி புறப்பட்டார்.
மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சென்ற பெருமாளுக்கு வழியில் உள்ள அனுமார், கருடன் தீர்த்த எல்லையில் தீபாராதனை மற்றும் பூஜை நடந்தது. மலைப்பாதையில் சென்று மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோயில் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு பெருமாள் திருத்தைலங்கள் சாத்தப்பட்டு நூபுர கங்கை தீர்த்தத்தில் தொட்டி திருமஞ்சனம் நடந்தது.
பின்பு மீண்டும் மண்டபத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்பு மாலையில் மீண்டும் வந்த வழியாக பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி அழகர்கோயிலில் தனது இருப்பிடம் வந்து சேருகிறார்.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி