திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 7ம் தேதி அன்னாபிஷேக விழா தரிசன நேரத்தில் மாற்றம்
2022-11-05@ 15:02:25

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 7ம் தேதி மாலை 4.44 மணிக்கு தொடங்கி, 8ம் தேதி மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 7ம் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று, சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அதேநாளில், பவுர்ணமி கிரிவலமும் அமைந்திருப்பதால், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தரிசன நேரம் மற்றும் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அண்ணாலையார் கோயிலில் 7ம் தேதி மற்றும் 8ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் மட்டும் வழக்கம் போல அனுமதிக்கப்படும். நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஒற்றை வழி வரிசை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோயிலில் வரும் 7ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. சுவாமிக்கு அன்னம் சாத்தும்போது, பக்தர்கள் அதை தரிசிக்க அனுமதிக்கும் வழக்கம் அண்ணாமலையார் கோயிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னம் சாத்தப்பட்ட பிறகே, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்திலும் தரிசனம்
வரும் 8ம் தேதி பகல் 2.38 மணி முதல் மாலை 6.19 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ஆன்மிக மரபின்படி, கிரகண நேரங்களில் கோயில் நடை அடைக்கும் வழக்கம் இல்லை. எனவே, வரும் 8ம் தேதி வழக்கம் போல கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணம் முடியும் நேரத்தில், கோயில் 4ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!