SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மபுரி-திருவண்ணாமலை வரை 4 வழிச்சாலை விரிவாக்க பணி தீவிரம்

2022-11-05@ 12:12:10

தர்மபுரி: தர்மபுரி- திருவண்ணாமலை இடையே 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தர்மபுரி-திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலை வரை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியும், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தர்மபுரி-திருவண்ணாமலை சாலையானது 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.

தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலை, மதிகோன்பாளையம் அருகே ராஜாபேட்டை, குரும்பட்டி, சோலைக்கொட்டாய், கே.நடுப்பட்டி, மூக்கனூர், செம்மனூர் வனச்சாலை வரை 4 வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தரை பாலம் அமைத்தல், தடுப்பு அமைத்தல், மண்கொட்டி சீர்படுத்தல் உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடக்கிறது. தர்மபுரி- அரூர் சாலையில் 4வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் காரணமாக, வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை அமைக்கும் ஊழியர்கள் போக்குவரத்தை சீர் செய்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்