முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற இன்ஜி. மாணவர்களுக்கு 14ம் தேதி முதல் வகுப்பு துவங்கும்
2022-11-05@ 00:28:22

சென்னை: இன்ஜினியரிங் முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பி.இ, பி.டெக். (முழு நேரம்) படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் செமஸ்டருக்கான அறிமுக வகுப்புகள் வரும் 14ம் தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் வரும் 28ம் தேதியும் தொடங்குகிறது. இந்த செமஸ்டருக்கான கடைசி வேலைநாள் அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி ஆகும். அதேபோல் பி.ஆர்க். (முழு நேரம்) படிப்பில் சேர்ந்தவர்களுக்கு அறிமுக வகுப்புகள் 14ம் தேதியும், பாடங்களுக்கான வகுப்புகள் 28ம் தேதியும் தொடங்கும். இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி கடைசி வேலைநாளாக இருக்கும்.
மேலும், பி.இ., பி.டெக்.(பகுதிநேரம்) மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் செய்முறை தேர்வும், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வும் தொடங்கி நடைபெறும். முதல் செமஸ்டர் முடிந்து, அதற்கு அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு மே மாதம் 15ம் தேதி தொடங்கும். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 15 நாள் நடக்கும் அறிமுக வகுப்புகளில், மாணவர்கள் தேர்ந்தெடுத்த துறை, கல்லூரி குறித்தும், படிப்புக்கு பின்னர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
Tags:
In the first round of consultation Eng. Student 14th First Class முதல் கட்ட கலந்தாய்வில் இன்ஜி. மாணவர் 14ம் தேதி முதல் வகுப்புமேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி