சுருட்டப்பள்ளி அணைக்கட்டிலிருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு தண்ணீர் திறப்பு
2022-11-04@ 16:58:56

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதுமட்டுமின்றி, ஆந்திர மாநிலத்திலும் தொடர் மழை பெய்து வருவதால், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம், நந்தவனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் சின்னாப்பட்டு, காரணி வழியாக சுருட்டபள்ளி அணைக்கட்டுக்கு வருகிறது. இங்கு அணைக்கட்டில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டையில் உள்ள 914 ஏக்கர் கொண்ட பெரிய ஏரியான ஈசா ஏரிக்கு நேற்றிரவு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தமிழக-ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஊத்துக்கோட்டை ஏரி நிரம்பியதும், அங்கிருந்து பேரண்டூர், பாலவாக்கம் உள்பட 14 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மழை தொடர்ந்து பெய்வதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதும், அதன் உபரிநீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால நாணயம் கீழக்கரையில் கண்டெடுப்பு
ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!