வட கிழக்கு பருவமழை தீவிரம்: 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னையில் விடியவிடிய கொட்டியது
2022-11-04@ 00:04:52

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 21 மாவட்டங்களில் இன்று மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. தொடக்கம் முதலே, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடஇலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் தரைப் பகுதிக்குள் நுழைந்தது.
அதனால், கடந்த இரண்டு நாட்களாக வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், அதிகபட்சமாக 200 மிமீ மழை கிடைக்கும் என்று, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட சென்னையில் 300 மிமீ மழை பெய்தது. இது நவம்பர் மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி திரும்பி கடலூர், டெல்டா மாவட்டங்களை ஒட்டிய தமிழக பகுதிக்குள் வந்தது. அதனால் நேற்று முன்தினம் இரவு முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
மேலும், சீர்காழியில் 220 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் 200 மிமீ, கொள்ளிடம் 170மிமீ, சிதம்பரம் 150மிமீ, சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை 120மிமீ, ராமநாதபுரம், சிவகங்கை 100 மிமீ, என பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை முதல் விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென் காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 6ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு படிப்படியாக மழை குறையத் தொடங்கி ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பெய்யத் தொடங்கும்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!