நெல்லை, தூத்துக்குடியில் அதிகாலை பனிப்பொழிவு அதிகரிப்பு-சாலைகளில் வாகனங்களில் செல்வோர் சிரமம்
2022-11-02@ 13:50:20

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்காலத்தில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கி, பெய்து வருகிறது. வடமாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் நல்ல மழை தென்படும் நிலையில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்று வரை உருப்படியாக ஒருநாள் கூட மழை பெய்யவில்லை.
இந்நிலையில் ஐப்பசி மாதத்திலே மார்கழி மாத பனிப்பொழிவு காணப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில், மழை, பனி, காற்று ஆகிய நான்கையுமே ஒரே நாளில் காண முடிகிறது.அதிலும் கடந்த இரு தினங்களில் அதிகாலை நேரத்தில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. நெல்லை சுற்றுவட்டாரங்களில் வெம்பா எனப்படும் அதிக பனிப்பொழிவு காலை நேரத்தில் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் செல்வோர் தொலை தூரத்தில் வரும் வாகனங்களை சரியாக அறிய முடிவதில்லை.
அந்தளவுக்கு பனிமூட்டம் சாலைகளில் நிறைந்து காணப்படுகிறது. வயல்களில் நிறைந்திருக்கும் நெல்மணிகள் பனிப்பெருக்கோடு காட்சியளிக்கின்றன. அதிக பனி பெய்தால் மழை வருமா என்கிற அச்சமும் விவசாயிகள் மத்தியில் காணப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பூ மார்க்கெட்டுகளுக்கு மல்லி உள்ளிட்ட பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி