தனது வாகனத்தில் சிக்கி இறந்த பெண்; நிருபரின் வீட்டுக்கு சென்று இம்ரான் ஆறுதல்
2022-11-01@ 01:21:45

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வாகனத்தில் சென்றபோது தவறிவிழுந்து உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளர் குடும்பத்தை சந்தித்து இம்ரான் ஆறுதல் கூறினார். பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். தனது கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமாபாத் நோக்கி இம்ரானின் பாகிஸ்தான் ெதக்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பாக நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியின்போது இம்ரானின் வாகனத்தில் சென்ற பெண் பத்திரிக்கையாளர் சதாப் நையீம் என்பவர் தவறி விழுந்தார். இதில் வாகனம் அவர் மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இம்ரான் கான் நேற்று உயிரிழந்த நையீம் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். நையீம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த பயங்கரமான சம்பவத்தை குறித்த எனது வேதனையை கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்தார். பிரதமர் ஷெபாஷ் செரீப்பும் இந்த சம்பவத்துக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்துகளின் விலை 11% உயர்வு: ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி
வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!
மனைவி தொடுத்த குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரரின் கைது வாரண்ட் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விருபாக்சப்பாவுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது: பெங்களூரு பாஜக அலுவலகம் முன்பு போராட்டம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!