வன மேம்பாட்டுக்கு ரூ. 244.59 கோடி மதிப்பில் பணிகள்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அலுவலர்களுடன் ஆய்வு
2022-10-31@ 19:51:18

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களில் ரூபாய். 244.59 கோடி மதிப்பிலான பணிகளின் முன்னேற்றம் குறித்து வனத்துறை கூட்ட அரங்கில் இன்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வனங்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றார். நடப்பாண்டு வனத்துறை மேம்பாட்டு பணிகளுக்காக மூலதனம் மற்றும் வருவாய் செலவின நிதி ஒதுக்கீடு மூலம் ரூபாய். 244.59 கோடியும், அரசு நிதி ஒதுக்கீடு ரூபாய். 25 கோடியும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மேம்பாட்டிற்கு ரூபாய். 26.58கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. தீ தடுப்பு பணிகளுக்கு ரூபாய். 4.18 கோடியும், வன விலங்குகள் பாதிப்பு நிவாரண பணிகளுக்கு ரூபாய். 340.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு திட்டத்தின் மூலம் காடுகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூபாய். 143.69 கோடியும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மேற்கொள்ளவும் சரியாக திட்டமிட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) சையத் முஜம்மில் அப்பாஸ், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (கேம்பா) சுப்ரத் மஹபத்ரா, கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்