கூடலூர் சிஆர்பிஎப் வீரர் மேற்குவங்கத்தில் மரணம்
2022-10-31@ 01:57:54

கூடலூர்: கூடலூர் சிஆர்பிஎப் வீரர் மேற்குவங்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தேனி மாவட்டம், கூடலூர் ராஜிவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (31). இவர் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா அருகில் உள்ள டாங்கிபிரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை முகாமில் சிவில் எலெக்ட்ரீசியன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 28ம் தேதி பணியில் இருந்த போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியது. இதில் மயக்கமடைந்த கவுதம், உடனடியாக இஸ்லாம்பூர் துணை பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த கவுதமுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கவுசல்யா என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.
மேலும் செய்திகள்
சேலத்தில் இருந்து சீரடிக்கு 35 நாட்கள் 1,207 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்ற முதியவர்
வேகத்தடை இருக்கும் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
வறண்டு காணப்படும் வெள்ளாறு வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிட கோரிக்கை
சேத்தியாத்தோப்பு அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்-3 கிராம மக்கள் வலியுறுத்தல்
மழையின்றி விளைச்சல் குறைந்த எள் விவசாயம்-விலையின்றி விவசாயிகள் கவலை
உடன்குடி பகுதியில் பருவமழை பொய்த்ததால் வறண்டு கிடக்கும் தாங்கைகுளம்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!