SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக எடையை கையாண்டு வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை: சீனாவிலிருந்து இறக்குமதியான 120 காற்றாலை இறகுகள்

2022-10-29@ 16:53:05

தூத்துக்குடி : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு ஒரே நேரத்தில் 120 காற்றாலை இறகுகள் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் காற்றாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட 120 காற்றாலை இறகுகள் பெங்க் ஷிசிங் என்ற கப்பல் மூலமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வந்தடைந்தன. 77 மீட்டர் கொண்ட காற்றாலை இறகுகள் துறைமுகத்திற்கு வந்தடைந்த 44 மணி நேரத்தில் இறக்கப்பட்டு காற்றாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி துறைமுகத்தில் போதுமான இடவசதியும், விரிந்த சரக்கு பெட்டக வசதியும் இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை எளிதில் கையாள முடிவதாகவும் இது போன்ற அதிகம் நீளம் கொண்ட காற்றாலை இறகுகள் மற்றும் அதிக எடை கொண்ட பொருட்களை கையாள முடிவதாக துறைமுக அலுவலர்கள் தெரிவித்தனர். அதிக நீளமும், எடையும் கொண்ட 120 காற்றாலை இறகுகளை கையாண்டதன் மூலமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை படைத்திருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்