SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி விடுமுறை முடிந்தும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறையவில்லை: உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி

2022-10-28@ 18:39:53

ஊட்டி: தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்தும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறையவில்லை. இதனால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை கடந்த 24ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஊடட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கடந்த சனிக்கிழமை முதல் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாகே காணப்படுகிறது. ஊட்டியில் நேற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவு காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்