SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை..!!

2022-10-26@ 10:49:15

கோவை: கோவை உக்கடம் ஈஸ்வரன்கோவில் பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக கோவையில் முகாமிட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.  கார் வெடிப்பு தொடர்பாக உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், என்.ஐ.ஏ. விசாரிக்க முகாந்திரம் உள்ள வழக்காக கருதப்படுகிறது.  தேசிய புலனாய்வு முகமையின் டிஐஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் கோவையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். காரில் கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் குறித்து காவல்துறையினரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர்.

ஜமேஷா முபினின் பிண்ணனி, வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். என்.ஐ.ஏ. தகவல்களை திரட்டினாலும் தற்போது வரை விசாரணை கோவை போலீசார் வசமே உள்ளதாக ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கார் வெடித்த வழக்கு என்.ஐ.ஏ. வசம் செல்ல வாய்ப்பிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்